கடிதத்தில் பிழை.. முத்துக்கருப்பன் ராஜினாமாவை நிராகரித்தார் வெங்கையா
காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பி முத்துகருப்பன் இன்று ராஜினாமா செய்யவுள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது எம்பி பதவியை முத்துகருப்பன் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்த நிலையில் அவர் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு இதுவரை வாய்திறக்காமல் இருந்தது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 30-ஆம் தேதி டெல்லியில் அறிவித்தார்.

ராஜினாமா கடிதம்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத போது எனக்கு எதற்கு பதவி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்யசபா தலைவரான துணை குடியரசு தலைவரிடம் அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்திருந்தார்.

கேட்க மாட்டேன்
முதல்வரும், துணை முதல்வரும் தனக்கு சகோதரர்கள் போன்றவர்களி என்றாலும் ராஜினாமா விவகாரத்தில் நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

முத்துகருப்பன் ராஜினாமா
டெல்லியில் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணை தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு முத்துகருப்பன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். பொதுவாக ராஜினாமா செய்வது என்பது உடல் நல பாதிப்பு, தனிப்பட்ட காரணங்களுக்காக இருந்தால் மட்டுமே ஏற்கப்படும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக ராஜினாமா கடிதம் ஏற்கப்படாது என்பது மரபு. எனவே முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.

ராஜினாமா இல்லை
எனினும் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் வகையில் வலுவான காரணங்களை கூறி மறுபடியும் ராஜினாமா செய்ய வாய்ப்புகள் உள்ளன. ராஜினாமா கடிதம் ஏற்க மறுக்கப்பட்டது குறித்து முத்துகருப்பன் கூறுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி என்னை தொடர்பு கொண்டு கூறினார். அதனால் நான் மீண்டும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தற்போது திடீர் பல்டி அடித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications