கடிதத்தில் பிழை.. முத்துக்கருப்பன் ராஜினாமாவை நிராகரித்தார் வெங்கையா
காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பி முத்துகருப்பன் இன்று ராஜினாமா செய்யவுள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது எம்பி பதவியை முத்துகருப்பன் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்த நிலையில் அவர் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு இதுவரை வாய்திறக்காமல் இருந்தது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 30-ஆம் தேதி டெல்லியில் அறிவித்தார்.

ராஜினாமா கடிதம்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத போது எனக்கு எதற்கு பதவி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்யசபா தலைவரான துணை குடியரசு தலைவரிடம் அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்திருந்தார்.

கேட்க மாட்டேன்
முதல்வரும், துணை முதல்வரும் தனக்கு சகோதரர்கள் போன்றவர்களி என்றாலும் ராஜினாமா விவகாரத்தில் நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

முத்துகருப்பன் ராஜினாமா
டெல்லியில் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணை தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு முத்துகருப்பன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். பொதுவாக ராஜினாமா செய்வது என்பது உடல் நல பாதிப்பு, தனிப்பட்ட காரணங்களுக்காக இருந்தால் மட்டுமே ஏற்கப்படும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக ராஜினாமா கடிதம் ஏற்கப்படாது என்பது மரபு. எனவே முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.

ராஜினாமா இல்லை
எனினும் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் வகையில் வலுவான காரணங்களை கூறி மறுபடியும் ராஜினாமா செய்ய வாய்ப்புகள் உள்ளன. ராஜினாமா கடிதம் ஏற்க மறுக்கப்பட்டது குறித்து முத்துகருப்பன் கூறுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி என்னை தொடர்பு கொண்டு கூறினார். அதனால் நான் மீண்டும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தற்போது திடீர் பல்டி அடித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications