For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரபர சூழலில் மோடியுடன் தம்பிதுரை சந்திப்பு.. தமிழக நிலவரம் குறித்து பேச்சு!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை இன்று சந்தித்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை லோக்சபா துணை சபாநாயகர் இன்று சந்தித்தார். சசிகலா ஆளுநரை சந்திக்கவுள்ள நிலையில் பிரதமருடனான தம்பிதுரையிள் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். சசிகலா ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில் அவர் பிரதமரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல் வெளியானது.

MP Thambidurai met Prime minister modi in the Parliament

தம்பிதுரை தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து பிரதமரிடம் பேசியதாக தகவல் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் அவர் பிரதமரை சந்தித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி இன்று நிறைவடைவதால் சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள் மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்திப்பது வழக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா ஆளுநரை சந்திக்கவுள்ள நிலையில் தம்பிதுரையின் இந்த சந்திப்பு பரபரப்பை கூட்டியுள்ளது.

English summary
MP Thambidurai was met Prime minister modi in the Parliament. There were no Political talks among them sources say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X