காமம் தலைக்கேறிய மனைவி.. பொங்கியெழுந்த கணவன்.. கள்ள காதலனை கைவிட மறுத்ததால் ஊருக்கு நடுவில்.. கொடுமை
துரோகம் செய்த மனைவிக்கு நூதன தண்டனை தந்துள்ளார் கணவன்
போபால்: காமம் தலைக்கேறிய மனைவியை வைத்து கொண்டு, கணவனால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.. கள்ளக்காதலனை கடைசிவரை கைவிட மறுத்துவிட்டார் மனைவி.. அதனால் கிராம மக்கள் முன்னிலையிலேயே மனைவிக்கு நூதன தண்டனை தரப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றன.. அப்படி ஒரு சம்பவம்தான் இது!
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் சாப்ரி ரன்வாஸ் என்ற கிராமம் உள்ளது.. பழங்குடியின மக்கள் இங்கு அதிகமாக வசித்து வருகிறார்கள்.. இங்குள்ள ஒரு பெண்ணுக்கு இன்னொரு ஆணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. இவர்களின் காதல் விவகாரம் கணவனுக்கு தெரியவந்துள்ளது.
அதனால், மனைவியை அவர் கண்டித்தார்.. ஆனால் காதலனை விட முடியாது என்று மனைவி கூறியுள்ளதாக தெரிகிறது.. இது தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு விஷயம் பஞ்சாயத்துக்கு வந்தது.. கணவனுக்கு துரோகம் செய்த அந்த பெண்ணுக்கு ஊர் மக்கள் தண்டனை தர நினைத்தார்கள்.. அதற்காக ஊருக்கு நடுவில் எல்லாரும் ஒன்று கூடினார்கள்.. கணவனை அந்த பெண் தோளில் உட்கார வைத்து ஊரையே சுற்றி வர வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது.
இதையடுத்து, ஊர்ஜனங்கள் முன்பு, கணவனை தோளில் ஏற்றினார் அந்த பெண்.. கணவனும் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. ஆனால், அந்த பெண்ணால், கணவனை தூக்க முடியவில்லை.. அதனால் திணறினார்.. இதை பார்த்த ஊர் மக்கள், கெட்ட கெட்ட வார்த்தைகளில் அந்த பெண்ணை திட்டினர்.. நடக்க முடியாமல் நடந்தபோது, அங்கிருந்த கம்பு எடுத்து வந்து, அந்த பெண்ணை அடித்தனர்.
இந்த சம்பவத்தை அவர்களே செல்போனில் வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுள்ளனர்.. இந்த கொடுமையான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications