ஆதரவாளர்களுடன் அகிலேஷ் யாதவ் அவசர ஆலோசனை.. வேட்பாளர்களுடன் இன்று முலாயம் ஆலோசனை!
சமாஜ்வாடி கட்சியிலிருந்து அகிலேஷ் யாதவ் நீக்கப்பட்ட நிலையில் இன்று கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் கூட்டத்தை முலாயம் சிங் யாதவ் கூட்டியுள்ளார்.
லக்னோ: சமாஜ்வாடி கட்சியை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் குதித்தார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம், அகிலேஷ் விலகாவிட்டால் அவருக்குப் பதில் புதிய முதல்வரை முலாயம் சிங்கே அதிரடியாக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
முலாயம் சிங் யாதவ் தான் ஏற்கனவே அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் கூட்டத்தை இன்று லக்னோவில் கூட்டியுள்ளார். அப்போது அவர்களிடம் கட்சியின் வெற்றிக்காக உறுதிபட பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.

முன்னதாக அகிலேஷ்யாதவை நீக்கியது குறித்து முலாயம் சிங் யாதவ் கூறுகையில், நான்தான் அவரை முதல்வராக்கினேன். ஆனால் என்னிடம் கூட ஆலோசனை கேட்காமல் அவர் செயல்படுகிறார். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார் கோபமாக.
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு முலாயம் பதிலளிக்கையில் இப்போது முடிவு செய்யவில்லை. அதேசமயம், யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பதையும் நானே முடிவு செய்வேன் என்று ஆணித்தரமாக கூறினார் முலாயம் சிங்.
முலாயம் சிங் யாதவ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த 187 பேரின் பெயர்கள் அகிலேஷ் யாதவ் தரப்பு அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது. எனவே இந்த 187 பேரும் யாருடன் அணி சேரப் போகிறார்கள் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது.
மொத்தத்தில் இன்று முலாயம் சிங் யாதவின் கூட்டத்தில் மேலும் பரபரப்புகள் அரங்கேறலாம் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications