காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் உடல்நிலைமை மோசமடைந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகரில் கடந்த 24-ந் தேதியன்று முப்தி முகமது சயீத்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
இதனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே முப்தி முகமது சயீத் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது மகள் முப்ஃதி மெகபூபா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக விரைவில் பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications