மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு.. முகுல் சங்மா உள்பட 12 எம்எல்ஏக்கள் திரிணமூலில் ஐக்கியம்
ஷில்லாங்: மேகாலயா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் அக்கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அமரீந்தர் அக்கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
அது போல் கோவாவில் முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் அந்த மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு செல்ல வேட்பாளராகவும் திரிணமூல் சார்பில் அறிவிக்கப்பட்டுவிட்டார்.

கட்சி வலிமை
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருந்து வந்த மேகாலயாவில் அக்கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும் மேகாலயா சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

பலம் என்ன
மேகாலயாவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதன் தலைவர் முகுல் சங்மா. இந்த நிலையில் 17 பேரில் 12 பேர் ஒட்டுமொத்தமாக திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வின்சென்ட் எச் பலா
மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வின்சென்ட் எச் பலாவுக்கும் முகுல் சங்மாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. அது போல் அக்கட்சியின் மாநில தலைவராக பலாவை நியமிப்பது குறித்து தன்னிடம் கட்சி தலைமை ஆலோசிக்கவில்லை என முகுல் சங்மா குற்றம்சாட்டுகிறார். இதிலிருந்தே சங்மா எப்போது வேண்டுமானாலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவுவார் என யூகிக்கப்பட்டது.

சங்மாவிடம் பேச்சுவார்த்தை
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சங்மாவிடம் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் பேச்சுவார்த்தையும் அதை அவர் ஏற்கவில்லை என தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கூட சங்மா கூறுகையில் கட்சியில் சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. அதை நிச்சயம் நான் செய்வேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
-
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இறங்கி அடித்த மம்தா.. ஒரே நாளில் பெரிய சம்பவம்.. பதறும் பாஜக.. அதிரும் வங்கத்து அரசியல்! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications