முல்லைப் பெரியாறு வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் கேரளா மறுசீராய்வு மனு தாக்கல்!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரும் 30-ந் தேதி சீராய்வு மனுத் தாக்கல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இதற்கு கேரளா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப், முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வருகிற 30ந் தேதியன்று சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications