முல்லைப் பெரியாறு தீர்ப்பு: ”புஸ்” ஆகிப் போன கேரள பந்த் – கடைகள் திறப்பு, பஸ்கள் ஓடின

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.ஆனால், அதற்கு அங்கு பெரிய வரவேற்பில்லை. கடைகள், பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழகம் 142 அடியாக உயர்த்தலாம் என்று பிறப்பித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று முல்லைப்பெரியாறு போராட்டக்குழு சார்பில் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டம், குமுளியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையில் தமிழக பகுதியான லோயர் கேம்ப் பகுதியில் தமிழக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

வழக்கம்போல மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+