மும்பை ஏர்போர்ட் மீது பறந்தது வைர நிறுவனத்தின் விளம்பர பலூன்கள்: 2 பேர் கைது
மும்பை: மும்பை விமான நிலையத்தை பீதிக்குள்ளாக்கிய பலூன்கள் வைர நிறுவனம் ஒன்று விளம்பரத்திற்காக பறக்கவிட்டது என்று தெரிய வந்துள்ளது. பொறுப்பில்லாமல் பலூன்களை விமான நிலையம் அருகே பறக்க விட்டது குறித்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பையில் இருந்து அகமதாபாத் கிளம்ப வேண்டியது. அப்போது வானில் 4 பொருட்கள் பறப்பதை பார்த்த விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. அந்த பறக்கும் பொருட்கள் ரிமோட்டில் இயங்கும் பாராசூட்களாக இருக்கும். யாராவது அதை கண்காணிக்க பறக்க விட்டிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
இதனால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீன லாந்தர்கள்
மும்பை ஜுஹு கடற்கரையில் வார இறுதி நாட்களில் சீன லாந்தர் விளக்குகள் விற்கப்படும். அந்த விளக்குகளை வாங்கிய யாரோ தான் தவறுதலாக காற்றில் பறக்கவிட்டிருக்கலாம் என்று போலீசார் முதலில் தெரிவித்தனர்.

விளம்பர பலூன்கள்
மும்பையில் உள்ள வைர நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது. அப்போது அந்நிறுவனம் விளம்பரத்திற்காக அந்த பலூன்களை பறக்கவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

கைது
பொறுப்பில்லாமல் விமான நிலையம் அருகே விளம்பர பலூன்களை பறக்க விட்டது தொடர்பாக மும்பை போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்பும் கூட மும்பையில் வானில் சீன லாந்தர் விளக்குகள் பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை
இது போன்று விளம்பர பலூன்கள் விமான நிலையம் அருகே பறக்கவிடப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விளம்பரத்திற்காக பலூன்களை பறக்க விடுவோருக்கு போலீசார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

அச்சுறுத்தல்
விமான நிலையங்களுக்கு ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. அதனால் இது போன்ற விளம்பர பலூன்களை கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications