மும்பை தாக்குதல்: நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா டெல்லியில்.. காவலில் எடுத்து விசாரிக்கிறது என்.ஐ.ஏ.!
டெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட, மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளியான பயங்கரவாதி தஹாவூர் ராணாவை அழைத்து வந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியது. டெல்லியில் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ., ராணாவை கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிறையில் ராணா அடைக்கப்பட்டார். இதன் பின்னர் ராணாவை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

175 பேரை பலி கொண்ட 2008-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தஹாவூர் ராணை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பிடமும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா நீதிமன்ற உத்தரவுப்படி ராணா, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தபப்ட்டார். இதனையடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் ராணா விவகாரம் தொடர்பாக நேற்று தீவிர ஆலோசனை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தஹாவூர் ராணாவை அழைத்து வந்த விமானம் டெல்லியை வந்தடைந்தது. டெல்லி விமான நிலையத்தில் தஹாவூர் ராணாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி திஹார் சிறையில் ராணா அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ராணாவை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
The National Investigation Agency (NIA) on Thursday evening formally arrested Tahawwur Hussain Rana, the key conspirator in the deadly 26/11 Mumbai terror attacks, immediately after his arrival at IGIA, New Delhi, following his successful extradition from the United States.… pic.twitter.com/Tg3GBrjbo5
— ANI (@ANI) April 10, 2025
என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, மும்பை தாக்குதல் சதித் திட்டத்தை தீட்டியது யார்? லஷ்கர் இ தொய்பாவுக்கு பாகிஸ்தான் அரசு எப்படி உதவி செய்தது? மும்பை தாக்குதல் சம்பவத்தில் இன்னமும் பிடிபடாத ப்யங்கரவாதிகள் யார்? என்பது குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications