நீங்க மும்பையில் வசிக்கிறீங்களா.. உங்க ஊரோட டெம்பரேச்சர் 2.4 டிகிரி கூடுதலாயிருச்சு தெரியுமா?
மும்பை: மும்பை நகரின் வெப்ப நிலை கடந்த 124 வருடங்களில் 2.4 டிகிரி செல்சியல் கூடுதலாகியிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு இருந்த ஆண்டுகளை விட அதாவது கடந்த 134 ஆண்டுகளில் 2015ம் ஆண்டுதான் அதிக வெப்பமான வருடம் என்ற பெயரை எடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 124 ஆண்டுகளில் மும்பை, டெல்லி மற்றும் பிற இந்திய நகரங்கள் அதிக வெப்ப நிலையை சந்தித்து வருவதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நாசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக இந்தியாஸ்பெண்ட்ஸ் ஆய்வுக் கட்டுரை விவரிக்கிறது.

2.4 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு...
கடந்த 1891ம் ஆண்டிலிருந்து மும்பையின் வருடாந்திர வெப்பநிலையானது 2.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாம்.

டெல்லி...
டெல்லியின் சராசரி வருடாந்திர வெப்ப நிலையானது கடந்த 1930ம் ஆண்டுக்குப் பிறகு 0.3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இந்திய அளவில்...
இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 200 ஆண்டுகளில் 2.2 டிகிரி அளவில் வெப்பநிலை உயர்ந்துள்ளதாம்.

6300 வானிலை மையங்கள்...
உலகம் முழுவதும் உள்ள 6300 வானிலை மையங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்பைடயில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது நாசா.

21ம் நூற்றாண்டில் தான்...
2000ம் ஆண்டுக்குப் பிறகுதான் அதிக அளவிலான வெப்பநிலையை உலகம் சந்தித்துள்ளது. உலக அளவில் வெப்பமயமாக்கல் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது.

ஸ்பெயின்...
பின்லாந்தும், ஸ்பெயின் நாடும்தான் அதிக அளவிலான வெப்ப நிலையை சந்தித்துள்ளன. அர்ஜென்டினா இதற்கு அடுத்த இடத்தில் வருகிறது.

எல் நினோ...
எல் நினோவும் கூட வெப்ப நிலை அதிகரிக்க ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த எல்நினோ காரணமாகவே கடந்த ஆண்டு இந்தியாவின் வட பகுதிகளில் அதிக அளவிலான வெப்ப நிலை நீடித்தது. பருவ மழையும் அங்கு பொய்த்தது.

வறட்சி, வெள்ளம், காட்டூத்தீ...
வெப்ப நிலை அதிகரிப்பால் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வெள்ளம் ஏற்படும் என்றும் ஆப்பிரிக்காவில் பஞ்சம் மேலும் அதிகரிக்கும் என்றும் ஆசியாவில் வறட்சி நிலவும் என்றும் வட அமெரிக்காவில் காட்டுத் தீ அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications