மும்பையில் வெள்ளம் வடிகிறது... இயல்பு நிலைக்கு திரும்புகிறது... ரயில் போக்குவரத்து துவக்கம்
மும்பை: மும்பையில் கடந்த இரு தினங்களாக கொட்டி வந்த கனமழை சற்றே ஓய்ந்துள்ளதால் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மெதுவாக இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. மின்சார ரயில்களும் ஓடத் தொடங்கியுள்ளன.
மும்பையில் சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை வியாழக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளிலும், குர்லா, அந்தேரி, தாராவி, பாரேல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.

இந்த மழை வெள்ளத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. கன மழையினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க நேரிட்டது. குடிசைப் வீடுகளில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மின்சார ரயில்களும் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மழை வெள்ள சேதங்களை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்தார்.
10 நாட்களில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததே இந்த வெள்ளத்திற்கு காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று காலை முதல் மழை சற்றே ஓயத்தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. எனினும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications