மும்பையில் பெண் பத்திரிகையாளரின் முடியை இழுத்து இனவெறி தாக்குதல்... ஊபர் பயணிக்கு போலீஸ் வலை
மும்பையில் பெண் பத்திரிகையாளரின் முடியை பிடித்து இழுத்து இனவெறி தாக்குதல் நடத்திய பயணியை போலீஸார் தேடி வருகின்றனர்.
Recommended Video

மும்பை: மும்பையில் பெண் பத்திரிகையாளரின் முடியை பிடித்து இழுத்து இனவெறி தாக்குதல் நடத்திய மற்றொரு பெண் பயணியை போலீஸார் தேடி வருகின்றனர்.
உஷ்நோட்டா பால் என்பவர் மும்பையில் பெண் பத்திரிகையாளர் ஆவார். இவர் ஒரு நிகழ்வுக்கு செல்வதற்காக ஊபர் நிறுவனத்தின் ஷேர் செய்து கொள்ளும் கால் டாக்ஸியில் பயணம் செய்தார். அப்போது அதில் மற்றொரு பெண்ணும் இருந்துள்ளார்.
அந்த பெண் லோயர் பரேலில் உள்ள ஊர்மி எஸ்டேட்டில் அந்த பெண் இறங்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் சிறிது தூரத்தில் உஷ்நோட்டா பாலை அவதூறாக பேசியுள்ளார். மேலும் அதிக கட்டணம் செலுத்தும் தன்னை கடைசியில் இறக்குவதாக டிரைவரிடம் கூச்சலிட்டுள்ளார்.

கொத்து முடி
உடனே உஷ்நோட்டாவை கண்டபடி பேசியுள்ளார். இதை வீடியோ எடுக்க முயன்றபோது பாலிடம் இருந்த போனை பறித்துக் கொண்டு உடைத்து விடுவதாக மிரட்டியுள்ளார். மிகவும் வெறியுடன் காணப்பட்ட அந்த பெண் இறங்குவதற்கு முன்னர் உஷ்நோட்டாவின் முடியை பிடித்து இழுத்துள்ளார். கொத்தாக முடியை பிடித்து இழுத்து அறுத்துள்ளார்.

சாட்சி கூற வரவில்லை
இதனால் பின் சீட்டில் முழுவதும் முடிகள் கொட்டப்பட்டிருந்தன. அப்படியும் வெறி அடங்காமல் உஷ்நோட்டாவின் முகத்தையும் கைகளையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் உஷ்நோட்டா புகார் அளித்தார். ஆனால் ஊபர் நிறுவனமோ நடந்தவற்றை சாட்சியாக கூற மறுத்துவிட்டது.
|
பதில்
இதுதொடர்பாக உஷ்நோட்டா பால் தொடர் டுவீட்கள் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்த்த சிலர் தாக்குதல் நடத்தியவர் ஆணாக இருந்திருந்தால் ஊபர் நிறுவனம் புகார் அளித்திருக்கும். பெண் என்பதால் தயங்குகிறது என்று சிலர் பதில் அளித்துள்ளார்.

ஆதரவு
இந்த தொடர் டுவீட்டுகளையும் மற்றவர்களின் விமர்சனங்களையும் பார்த்த ஊபர் நிறுவனம் உஷ்நோட்டா பாலுக்கு பதில் அளித்துள்ளது. அதில் இந்த கால் டாக்ஸியில் நடந்த சம்பவம் வருத்தமடைய செய்துள்ளது. இது முழு அத்துமீறல். இந்த வழக்கு விசாரணைக்கு தாங்கள் ஆதரவு தருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications