பெண் செய்தியாளருக்கு டுவிட்டரில் பலாத்கார மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் பெண் செய்தியாளர் ஒருவருக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமேந்திர குமார் சிங் என்னும் பெயர் கொண்ட அந்த நபர், சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளரை இரண்டு நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்தின் படங்களை அப்பெண் டுவிட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து அந்த நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் ஆசாத் மெய்தீன் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். எனினும் இது வரையில் அந்த டுவிட்டர் பதிவர் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications