For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெக்கான் க்வீன் ரயிலில் தீ - மும்பையிலிருந்து தாமதமாக புறப்பட்ட ரயில்கள்

Google Oneindia Tamil News

Mumbai railway station fire accident …
மும்பை: மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் டெக்கான் க்வீன் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புனே செல்லும் டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5.10 மணிக்கு சிஎஸ்டி ரெயில் நிலையத்தில் பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தது.

நேற்று மாலை 5.03 மணியளவில் திடீரென ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த பெட்டி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த பெட்டியில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலே செல்லும் ஓவர்ஹெட் மின்கம்பியில் மின்விநியோகம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரயில் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதைத் தொடர்ந்து சேதமடைந்த ரயில் பெட்டியை ரயில்வே ஊழியர்கள் தனியாக பிரித்தனர்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மாலை 5.43 மணியளவில் 9 ஆம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த கோலாப்பூர் சயாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 5 பெட்டியிலும் மாலை 6.10 மணிக்கு 15 ஆம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஹவுரா மெயில் ரயிலின் ஒரு பெட்டியிலும் இருந்து கரும்புகை கிளம்பி தீப்பிடிக்க தொடங்கியது.

உடனடியாக தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு 2 ரயில் பெட்டியிலும் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் தீப்பிடித்த 2 பெட்டிகளும் தனியாக பிரிக்கப்பட்டன.

சிஎஸ்டி ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பயணிகள் பீதி அடைந்தனர். பயணிகள் அனைவரும் சுதாரித்துக் கொண்டு கீழே இறங்கியதால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து 3 ரயில்களும் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு சென்றன.

புனே செல்லும் டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 6.14 மணிக்கு புறப்பட்டு சென்றது. 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய கோலாப்பூர் சயாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது.

தற்போது சென்னை ரயில்நிலைய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் இதுவும் தீவிரவாதிகளின் சதியாக என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகின்றது.

English summary
Mumbai railway station got fire accident yesterday. There are no deaths in this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X