மும்பை: 6 வயது சிறுவனுக்கு செக்ஸ் சில்மிஷம்... பள்ளி முதல்வர் கைது
மும்பை: மும்பையின் அந்தேரி(கிழக்கு) பகுதியில் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி முதல்வரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயின்ட் சேவியர் பள்ளியின் முதல்வர் ரொசாரியோ அல்போன்சோ, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோருக்கு கடந்த செப்டம்பர் 4ம் தேதி கூறவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து பெற்றோர்களும் பொதுமக்களும் அந்தப் பள்ளியின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், பள்ளியின் பிரின்சிபலைக் கைது செய்தனர். மேலும், இவர் இது போன்று வேறு ஏதேனும் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்று காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில்மிஷ விவகாரத்தில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டது குறித்த தகவல் வெளியானதும், கோபமடைந்த காங்கிரஸார், பள்ளி வளாகத்தினுள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.












Click it and Unblock the Notifications