முண்டே மரணத்தின் பின்னணியில் சதி- சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரிக்கை!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணத்துக்கு காரணமான கார் விபத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாகவும் இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மகாராஷ்டிரா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அவ்தூத் பாக் கூறியுள்ளார்.

Munde accident: Maharashtra BJP spokesman Wagh demands CBI probe

மத்திய அமைச்சரான கோபிநாத் முண்டே டெல்லி விமானம் நிலையம் அருகே கார் விபத்தில் சிக்கி இன்று உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.

இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அவ்தூத் பாக், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கோபிநாத் முண்டே உள்ளிட்டோரின் மிகப் பெரிய வெற்றிய சகித்துக் கொள்ள முடியாத சக்திகள்தான் "கார் விபத்து" சதியை அரங்கேற்றியிருக்கலாம்.

இந்த கார் விபத்து சம்பவம் தொடர்பான உடனே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+