பாஜகவில் அவமதிக்கப்பட்ட முண்டே… காங்கிரஸ் சேர திட்டமிட்டதாக தகவல்
மும்பை: அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே, இறப்பதற்கு கடைசி நாள் வரை கட்சியில் அவமதிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் பா.ஜ.கவை விட்டு விலக எண்ணியதாகவும் அவரது நெருங்கிய உதவியாளர் பாண்டுரங் ஃபண்ட்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்த முண்டேவின் மறைவு, அந்த சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாது, அம்மாநில பா.ஜனதாவுக்கும் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் மறைந்த முண்டேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மகாராஷ்ட்ரா சட்டமேலவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாண்டுரங் ஃபண்ட்கர், முண்டே பா.ஜனதாவுக்குள் போராடிக்கொண்டிருந்ததாகவும், ஒருகட்டத்தில் கட்சியைவிட்டே விலகும் அளவுக்கு கூட வந்ததாகவும் கூறினார்.
கடந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து முண்டேவுக்கு நெருங்கிய உதவியாளராக செயல்பட்டுவந்தவர் பாண்டுரங் ஃபண்ட்கர். அவரது இந்த பேச்சு பா.ஜனதாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மேலும் பேசுகையில், "முண்டே ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கட்சிக்குள் அவர் போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டியதாக இருந்தது. ஒருகட்டத்தில் அவர் கட்சியைவிட்டே விலக எண்ணியபோது, அவருக்கு காங்கிரஸில் சேர அழைப்பு வந்தது. மத்தியில் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி, மாநிலத்தில் அவர் கூறுகிற 2 பேருக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேதான் முண்டேவை சமாதானப்படுத்தி, அவரை பா.ஜனதாவிலிருந்து விலகாதவாறு பார்த்துக்கொண்டார். ஆனால் கட்சிக்குள் முண்டே எப்பொழுதெல்லாம் போராட்டத்தை எதிர்கொண்டாரோ அப்போதெல்லாம் அவர் என்னிடம், " இதற்காகத்தான் என்னை காங்கிரஸில் சேரவிடாமல் தடுத்தாயா?" என கோபப்படுவார்.
கட்சிக்குள் அவர் அவதிக்கப்பட்டாலும் அவர் தனது வாழ்க்கையை கட்சிக்காக அர்ப்பணித்தார். அவரது மரணம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை நேசிக்கும் மக்களிடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே முண்டே மரணம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications