மேனேஜரை கொல்லக் கூலிப்படையை ஏவியதாக கன்னட நடிகர் வினோத் ஆல்வா கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூருவில் தன் மேலாளரை கொலை செய்வதற்கு கூலிப்படையை ஏவிய நடிகர் வினோத் ஆல்வாவை போலீசார் கைது செய்தனர்.
கன்னட நடிகர் வினோத் ஆல்வாவிடம் மேலாளராக பணியாற்றி வந்தவர் சச்சிதானந்தா. இவருக்கும், நடிகர் வினோத்துக்கும் இடையில் நடந்த மோதலில் சச்சிதானந்தா பணியிலிருந்து விலகி விட்டார்.

இதனால் அவர் மீதுஆத்திரமடைந்த வினோத், உதய் என்பவர் மூலம் அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக புத்துார் போலீசில் சச்சிதானந்தா புகார் செய்தார்.
இதனையடுத்து தட்சிண கன்னடாவில் உள்ள ஈஸ்வர் மங்களாவில் வினோத்தை கைது செய்த போலீசார் அவரை புத்துார் ஜெ.எம்.எப்.சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications