For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலுக்கு இடையில் வந்த மதம்.. வாலிபரின் கழுத்தை அறுத்து கொன்ற பெண் குடும்பம்.. டெல்லியில் பயங்கரம்

டெல்லியில் இந்து முஸ்லீம் காதல் பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இந்து முஸ்லீம் காதல் பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த முஸ்லீம் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இந்து குடும்பத்தை சேர்ந்த அங்கித் சக்சேனாவை கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் காலணியில் எல்லோருக்கும் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

இதனால் அங்கு கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதுகுறித்து நெஞ்சை உறைய வைக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்து முஸ்லீம் காதல்

இந்து முஸ்லீம் காதல்

அங்கித் சக்சேனாவும் அந்த முஸ்லீம் பெண்ணும் கடந்த 8 வருடமாக காதலித்து வந்துள்ளனர். பள்ளி காலத்தில் இருந்து இவர்கள் காதலித்துள்ளனர். இவர்கள் காதல் விஷயம் இரு குடும்பத்தை தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. இவர்கள் ஒரே காலணியில் வசித்து வந்துள்ளனர்.

திருமணம்

திருமணம்

இந்த நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் பிரச்சனை செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்யவும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

திட்டம்

திட்டம்

இந்த நிலையில் அந்த பெண் அங்கித்துடன் ஓடிப்போக திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக தன் குடும்பத்தாரை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு டெல்லி ரயில் நிலையத்திற்கு ஓடிப்போக முடிவெடுத்துள்ளார். ஆனால் அந்த குடும்பம் கடைசி நேரத்தில் பூட்டை உடைத்து தப்பித்து இருக்கிறது.

கொடூரமாக கொலை

கொடூரமாக கொலை

வெளியே வந்த பெண்ணின் குடும்பம் அந்த பெண்ணை அடித்து உள்ளது. அதே காலனியில் வசித்து வரும் அங்கித்தின் அம்மாவையும் தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அங்கித்தை கழுத்தை அறுத்து எல்லோர் முன்னிலையிலும் கொலை செய்துள்ளனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பெண்ணின் குடும்பத்தார் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

English summary
Muslim girl family kills Hindu boy name Ankit Saxena over love issue in Delhi. Police protection increased in that area in order to prevent the riot for happening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X