தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்! வேகமாக வந்த ரயில்! பாய்ந்து காப்பாற்றிய முஸ்லீம் வாலிபர்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

போபால்: ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் ஒருவரை இஸ்லாமியர் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றிய சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்! வேகமாக வந்த ரயில்! நடுவே பாய்ந்து காப்பாற்றிய இஸ்லாமியர்.. வீடியோ

    மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு போபால் அருகே உள்ள பர்கேதி ரயில் நிலையத்தில் இரவு 8 மணிக்கு முகமது மெகபூப் என்ற நபர் ரயிலுக்கு காத்துகொண்டு இருந்தார்.

    37 வயதாகும் இவர் அந்த பகுதியில் தச்சராக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் முகமது மெகபூப் ரயிலுக்கு காத்திருக்கும் போது எதிர் பிளாட் பார்மில் இருந்து பெண் ஒருவர் ரயிலுக்கு காத்து இருந்தார்.

    பிளாட்பாரம்

    பிளாட்பாரம்

    26 வயதாகும் அந்த பெண் முதுகில் ஒரு பெரிய பேக் மாட்டி இருந்ததாக கூறப்படுகிறது. எதிர் பிளாட் பார்மில் இருந்த அந்த பெண் ரயில் ஏறுவதற்கு இந்த பிளாட்பார்ம் வர வேண்டும். இந்த நிலையில் நடைமேடை வழியாக தண்டவாளத்தை கடக்காமல், விதியை மீறி தண்டவாளம் வழியாக நடந்து அந்த பெண் இந்த பிளாட் பார்மிற்கு வர முயன்றுள்ளார்.

    போபால் பெண்

    போபால் பெண்

    அந்த பெண் சரியாக தண்டவாளத்தை கடக்க ஓடி வரும் நேரத்தில் ரயில் வந்துள்ளது. ரயிலை பார்த்ததும் பதற்றம் அடைந்த அந்த பெண் அங்கேயே கால் தவறி கீழே விழுந்துள்ளார். படங்களில் காட்டுவது போல தண்டவாளத்தில் படுத்தபடி அச்சத்தோடு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தி இருக்கிறார். அவரை நோக்கி வேகமாக ரயில் வந்து கொண்டு இருந்தது. சுற்றி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

    முகமது மெகபூப்

    முகமது மெகபூப்

    அப்போது சட்டென ரயில் தண்டவாளத்தில் குதித்த முகமது மெகபூப் வேகமாக அந்த பெண்ணை நோக்கி ஓடி உள்ளார். ஆனால் அதற்குள் ரயில் அந்த பெண்ணை நெருங்கிவிட்டது. அந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லும் அளவிற்கு முகமது மெகபூப்பிற்கு நேரமில்லை. இதனால் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை தண்டவாளத்தின் நடுப்பகுதியில் நகர்த்தி போட்டுள்ளார்.

    படுத்துக்கொண்டார்

    படுத்துக்கொண்டார்

    அதாவது ரயிலுக்கு கீழே நடுவில் பாதுகாப்பாக படுத்து இருக்கும் வகையில் அந்த பெண்ணை நகர்த்தி உள்ளார். அதோடு அந்த பெண்ணுக்கு துணையாக முகமது மெகபூப்பும் தண்டவாளம் நடுவே படுத்துக்கொண்டார். தன் உயிரை பற்றி கவலைப்படாமல் அவர் இப்படி செய்துள்ளார். தண்டவாளம் நடுவே நேராக படுத்தால் பெரும்பாலும் ரயில் நம் மீது ஏறாமல் கடந்து சென்றுவிடும். ரயில் தண்டவாளங்களில் சிலர் இதை சாகசமாக செய்வது உண்டு.

    காயம் இல்லை

    காயம் இல்லை

    அதேபோல் முகமது மெகபூப்பும் தனது உயிரை ரிஸ்க் எடுத்து அந்த பெண்ணை காப்பாற்றி உள்ளார். ரயில் கடந்து சென்ற பின் இரண்டு பேரும் பாதுகாப்பாக அங்கிருந்து எழுந்து வந்தனர். 28 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் கடந்தும் கூட இரண்டு பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முகமது மெகபூப்பின் இந்த வீரதீர செயல் பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. தனது உயிரை பற்றி கவலைப்படாமல் அவர் இப்படி செயல்பட்டுள்ளார்.இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

    பாராட்டு

    பாராட்டு

    அவரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணுடன் வந்திருந்த அவரின் பெற்றோர் முகமது மெகபூப்பை கட்டி அணைத்து அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்தியாவில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு நிறைந்த தாக்குதல்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக வடமாநிலங்களில் இது போன்ற மத ரீதியான மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் முகமது மெகபூப்பின் இந்த செயல் பலரின் இதயத்தை உருக்கி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+