குடும்ப கட்டுப்பாடு செய்யாத முஸ்லிம்களுக்கு வாக்குரிமை எதற்கு? பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு
லக்னோ: குடும்ப கட்டுப்பாட்டு விஷயத்தில், நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரேமாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும், நாட்டு நலன் கருதி குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திவருபவர் பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ். உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான உன்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சாக்ஷி கூறியதாவது: இந்துக்கள் கருத்தடை செய்துகொள்ளும்போது, அதை முஸ்லீம்களும் விருப்பட்டு செய்யவேண்டும். அனைவருக்கும் ஒரேவிதமான சட்டம் இருக்க வேண்டும்.
முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் கருத்தடை செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், குடும்பக்கட்டுபாடு செய்து கொள்ள வேண்டும். நான்கு குழந்தைகள் பற்றி நாம் பேசும் போது பொதுமக்களிடம் இருந்து கண்டனக்குரல்கள் எழுகின்றன. ஆனால், 4 மனைவிகள் மூலம் 40 குழந்தைகள் பெற்றால் யருமே எதையும் சொல்வது இல்லை.
மக்கள் தொகை பெருக்கம் நாட்டுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு குடும்ப கட்டுபாடு மூலமே தீர்வு காண முடியும். குடும்ப கட்டுபாடு கண்டிப்பாக அவசியம். ஏனெனில் நாடு சுதந்திரம் அடைந்த போது 30 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 130 கோடியாக பெருகியுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என யாராக இருந்தாலும் ஒரே சட்டமிருக்க வேண்டும்.
அனைவருக்கும் பொதுவான சட்டம் இல்லாமல் நாடு பலன் அடையாது. எனவே அரசு மற்றும் எதிர்கட்சி என அனைத்தும் ஒருங்கிணைந்து கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். இதை பின்பற்றாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். வெவ்வேறு சமூகத்தின் அடிப்படையில் நாம் பெண்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்துப்பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு ஏற்கனவே சாச்ஷி மகராஜ் ஆளாகியுள்ளார்.
-
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?












Click it and Unblock the Notifications