'மோடி அரசு பற்றிய பார்வையை முஸ்லிம்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பற்றிய பார்வையை முஸ்லிம்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தலைவர் சிராஜூதீன் குரேசி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம்களிடையே சிராஜூதீன் குரேசி பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீதான பார்வையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நாட்டை கட்டியெழுப்புவதிலும் சிறுபான்மையினர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாம் பங்கேற்க வேண்டும்.
அது அரசாங்கத்துக்கான உதவி மட்டுமல்ல.. முஸ்லிம் சமுதாயத்துக்கும் செய்யும் உதவியும் கூட.. இந்த நாட்டின் குடிமகன்கள் என்கிற வகையில் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு குரேசி பேசினார்.












Click it and Unblock the Notifications