Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்தையா முரளிதரனுக்கு அதிர்ஷ்டம்.. காஷ்மீரில் 25.75 ஏக்கரை ஓசிக்கு கொடுத்த அரசு.. வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு சொந்தமான குளிர்பான நிறுவனத்துக்கு பாட்டில் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்காக ஜம்மு காஷ்மீரில் 25.75 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜம்மு காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் முதல்வர் ஓமர் அப்துல்லாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதித்துள்ளனர். தற்போது முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

muttiah muralitharan jammu kashmir

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முத்தையா முரளிதரன் இப்போது பிஸினஸ்மேனாக மாறிவிட்டார். இலங்கையில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கம்பெனியின் பெயர் சிலோன் பீவெர்ஜ் என்பதாகும்.

இந்த பிசினஸை நம் நாட்டிலும் விரிவுப்படுத்தும் பணியில் முத்தையா முரளிதரன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது முத்தையா முரளிதரன் நிறுவனத்தால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது முத்தையா முரளிதரன் நடத்தி வரும் சிலோன் பீவெர்ஜ் நிறுவனம் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு ஆலை என்பது ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்காக முத்தையா முரளிதரனுக்கு 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தை முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தான் வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேளவ்ியாக எழுப்பி உள்ளன. இந்த கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தரிகாமி கூறுகையில், ‛‛ஜம்மு காஷ்மீரில் இலவசமாக முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பதிலளிக்க வேண்டும்'' என்று கூறினார். அதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிஏ மிர், ‛‛இலவசமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் மிகவும் சீரியஸானது. இந்தியாவை சாராத ஒருவர் (முத்தையா முரளிதரன்) ஒருவர் எப்படி ஒரு பைசா செலவின்றி இலவசமாக நிலம் பெற முடியும் அரசு விளக்கம் அளித்தே ஆக வேண்டும்'' என்றார்.

இதுபற்றி விவசாயத்துறை அமைச்சர் ஜாவித் அகமது தார் கூறுகையில், ‛‛இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இதுபற்றி எங்களிடம் எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்தின் உண்மை தன்மை பற்றி விசாரிக்கிறோம்'' என்றார். இந்த சம்பவம் என்பது காஷ்மீர் முதல் ஓமர் அப்துல்லாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக முத்தையா முரளிதரன் நம்நாட்டில் தனது தொழிலை விரிவுப்படுத்தும் வகையில் கடந்த கடந்த ஆண்டு கர்நாடகாவில் ரூ.1,400 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தார். இதையடுத்து கர்நாடக அரசு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 46 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+