"மட்டன்" குழம்பில் அதென்ன..கண்ணு முழிச்சு முழிச்சு பார்க்குதே.. கை, கால் வேற.. அலறி கத்திய குடும்பம்
சண்டிகர்: 3 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி, இன்னமும் நீங்கவில்லை.. இணைய தளம் முழுவதும் அது சம்பந்தப்பட்ட வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு வசித்து வரும் விவேக்குமார் என்பவர், பிரகாஷ் தாபா என்ற ஒரு அசைவ ஹோட்டலில் அடிக்கடி சாப்பிட்டு விட்டு செல்வாராம்.. ரெகுலராக வந்துபோவதால், அக்கவுண்ட்கூட இவருக்கு இங்கு இருக்கிறதாம்.

இப்படித்தான் சம்பவத்தன்று, தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றுள்ளார்.. மொத்த குடும்பமும், அசைவ உணவுகளையே ஆர்டர் செய்திருக்கிறார்கள்.. சிறிது நேரத்தில், ஓட்டல் ஊழியரும், ஆர்டர் செய்யப்பட்ட உணவை கொண்டு வந்து வைத்திருக்கிறார்..
அதிர்ச்சி: விவேக்குமார் மட்டன் குழம்பு ஆர்டர் செய்திருக்கிறார்.. சாப்பாட்டில் குழம்பை எடுத்து ஊற்றியதுமே, ஒரு பெரிய பீஸ் வந்து விழுந்துள்ளது.. இதுவரைக்கும் மட்டன் குழம்பிலும் சரி, மட்டன் பிரியாணியிலும் சரி, இவ்வளவு பெரிய சைஸ், பீஸ் பார்த்ததே இல்லையே என்று ஆச்சரியப்பட்டுள்ளார்.
ஆனாலும், அந்த பீஸ் பார்ப்பதற்கு , மிகப்பெரிய சைஸில் இருக்கவும், முழு காடை என்று நினைத்திருக்கிறார்.. அப்படியே இருந்தாலும், நாம் ஆர்டர் செய்யாத, காடையை எப்படி நமக்கு கொண்டு வந்து வைத்தார்? ஒருவேறு யாருக்கோ செல்ல வேண்டிய உணவு, தவறி டேபிள் மாறி வந்துவிட்டதோ என்று குழம்பினார்..
மிதந்த எலி: பிறகுதான் அந்த பீஸை உற்று உற்று பார்த்தால், அது மட்டனும் இல்லை, காடையும் இல்லை, செத்து மிதப்பது எலி என்று தெரியவந்தது.. இதை பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியடைந்து, ஹோட்டல் ஓனரிடம் ஓடியிருக்கிறார்கள்.. மட்டன் குழம்பில் மிதக்கும் எலி பற்றி புகாரும் தந்திருக்கிறார்கள்.. ஆனால், புகாரை மறுத்த ஓனர், அந்த குடும்பத்தையே மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த ஹோட்டலுக்கும், விவேக்குமாருக்கும் ஏதோ "பில் தகராறு" இருக்கிறதாம்.. அதற்காகவே, விவேக்குமார் இப்படியெல்லாம் ஒரு டிராமா போடுகிறார் என்று ஹோட்டல் ஓனர் குற்றம்சாட்டினார்.. ஆனால், எதையுமே காதில் வாங்காத விவேக்குமார், நடந்த சம்பவங்கள் அத்தனையையும் வீடியோவாக பதிவு செய்தார்.. முக்கியமாக, அந்த எலி கிரேவியையும் வீடியோ எடுத்து, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்..
வீடியோ: இந்த புகாரின்பேரில், அந்த ஓட்டல் ஓனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. அதேசமயம், சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஓட்டலுக்கே சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். அத்துடன் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஓட்டல்களில் அடிக்கடி சோதனைகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விவேக் குமார் எடுத்த "எலி குழம்பு" வீடியோதான் சோஷியல் மீடியாவில் வெளியாகி மூக்கை துளைத்து கொண்டிருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications