2 மாநில அரசுக்கு பங்கு.. என்னுடைய போனை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது.. மம்தா பானர்ஜி பகீர்
என்னுடைய போனை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் புகார் வைத்துள்ளார்.
கொல்கத்தா: என்னுடைய போனை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் புகார் வைத்துள்ளார்.
இந்தியாவில் வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இது தொடர்பாக தற்போது புதிய விவரங்களும், தகவல்களும் வெளியாகி வருகிறது. இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம்தான் இந்த ஹேக்கிங்கை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் முக்கிய பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள், களப்பணியாளர்கள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது.

பேசினார்
இந்த நிலையில் இந்த வாட்ஸ் ஆப் விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அதில், இது மிகவும் பெரிய பிரச்சனை. இதை உடனடியாக மத்திய அரசு விசாரிக்க வேண்டும். பிரதமர் மோடி இதில் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.

உரிமை இல்லை
நாட்டில் தற்போது பேச்சு உரிமை கூட இல்லாமல் போய்விட்டது. நாம் இப்போதெல்லாம் போனில் கூட சுதந்திரமாக பேச முடியாது. யாராவது நாங்கள் பேசுவது எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது வாட்ஸ் ஆப் மெசேஜ்களை கூட ஹேக் செய்ய தொடங்கிவிட்டனர்.

என்னுடைய போன்
என்னுடைய போனையும் கூட மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது. எனக்கு இது முன்பே தெரியும். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. மத்திய அரசு என்னை முடக்க வேண்டும் என்று இப்படி செய்கிறது.

யார்?
இரண்டு மாநில அரசுகளும் இதில் தலையிட்டுள்ளது. ஆனால் அவர்கள் யார் என்று சொல்ல மாட்டேன்.அதில் ஒரு மாநில அரசு பாஜகவை தலைமையாக கொண்டு இயங்கி வருகிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications