மணிப்பூரில் எல்லையில் கதவுகளை இழுத்து மூடி மியான்மர் ராணுவம் அட்டூழியம்- இதற்கு குரல் வருமா?
மணிப்பூர் எல்லையில் கதவுகளை இழுத்து மூடி மியான்மர் ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீர், அருணாச்சல், பஞ்சாப் எல்லை அட்டூழியங்களைப் பற்றி பேசுகிறவர்கள் இதற்கு குரல் கொடுப்பார்களா? என்பது அப்ப
மோரே: மணிப்பூர் எல்லையில் இந்திய கிராமத்துக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது மியான்மர் ராணுவம். அத்துடன் எல்லை கதவுகளையும் இழுத்து மூடியிருக்கிறது மியான்மர் ராணுவம்.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அருணாச்சல் எல்லைகளைப் பற்றிதான் மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால் மணிப்பூர் எல்லையில் மியான்மர் ராணுவத்தின் அட்டூழியத்தை கேட்பார் யாரும் இல்லை.
50 ஆண்டுகளாக மணிப்பூரில் மோரே உள்ளிட்ட இடங்களின் நிலப்பகுதியை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டே வருகிறது மியான்மர் ராணுவம். ஆனால் இதைப் பற்றி யாருமே பேசுவது இல்லை என்பதுதான் கொடுமை.

அத்துமீறும் மியான்மர் ராணுவம்
தற்போது ஹலோன்பாய் என்ற கிராமத்துக்கு சொந்தம் கொண்டாடுகிறது மியான்மர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்தது மியான்மர் ராணுவம்.

மர அறுவை ஆலை
அந்த மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் மர அறுவை தொழிற்சாலை சூறையாடி இயந்திரங்களை அள்ளிச் சென்றது மியான்மர் ராணுவம். இயந்திரங்கங்களை இதுவரை அந்நாட்டு ராணுவம் திருப்பித் தரவில்லை.

எல்லைக் கதவுகளை பூட்டி...
இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள் மியான்மர் எல்லைக் கதவுகளை பூட்டி போராட்ட நடத்தினர். இதனால் இருநாடுகளிடையே பதற்றம் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கிராம மக்கள் கதவுகளைத் திறந்துவிட்டனர்.

ராணுவமே பூட்டியதால் பதற்றம்
ஆனால் மியான்மர் ராணுவம் மீண்டும் வந்து கதவுகளை பூட்டிவிட்டுச் சென்றது. இதனால் இருநாடுகளிடையேயான எல்லைப் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications