மணிப்பூரில் எல்லையில் கதவுகளை இழுத்து மூடி மியான்மர் ராணுவம் அட்டூழியம்- இதற்கு குரல் வருமா?
மணிப்பூர் எல்லையில் கதவுகளை இழுத்து மூடி மியான்மர் ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீர், அருணாச்சல், பஞ்சாப் எல்லை அட்டூழியங்களைப் பற்றி பேசுகிறவர்கள் இதற்கு குரல் கொடுப்பார்களா? என்பது அப்ப
மோரே: மணிப்பூர் எல்லையில் இந்திய கிராமத்துக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது மியான்மர் ராணுவம். அத்துடன் எல்லை கதவுகளையும் இழுத்து மூடியிருக்கிறது மியான்மர் ராணுவம்.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அருணாச்சல் எல்லைகளைப் பற்றிதான் மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால் மணிப்பூர் எல்லையில் மியான்மர் ராணுவத்தின் அட்டூழியத்தை கேட்பார் யாரும் இல்லை.
50 ஆண்டுகளாக மணிப்பூரில் மோரே உள்ளிட்ட இடங்களின் நிலப்பகுதியை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டே வருகிறது மியான்மர் ராணுவம். ஆனால் இதைப் பற்றி யாருமே பேசுவது இல்லை என்பதுதான் கொடுமை.

அத்துமீறும் மியான்மர் ராணுவம்
தற்போது ஹலோன்பாய் என்ற கிராமத்துக்கு சொந்தம் கொண்டாடுகிறது மியான்மர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்தது மியான்மர் ராணுவம்.

மர அறுவை ஆலை
அந்த மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் மர அறுவை தொழிற்சாலை சூறையாடி இயந்திரங்களை அள்ளிச் சென்றது மியான்மர் ராணுவம். இயந்திரங்கங்களை இதுவரை அந்நாட்டு ராணுவம் திருப்பித் தரவில்லை.

எல்லைக் கதவுகளை பூட்டி...
இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள் மியான்மர் எல்லைக் கதவுகளை பூட்டி போராட்ட நடத்தினர். இதனால் இருநாடுகளிடையே பதற்றம் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கிராம மக்கள் கதவுகளைத் திறந்துவிட்டனர்.

ராணுவமே பூட்டியதால் பதற்றம்
ஆனால் மியான்மர் ராணுவம் மீண்டும் வந்து கதவுகளை பூட்டிவிட்டுச் சென்றது. இதனால் இருநாடுகளிடையேயான எல்லைப் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications