மிசோரம் எல்லையில் மியான்மர் நகரை கைப்பற்றிய கிளர்ச்சி குழு- இந்தியாவின் அத்தனை முதலீடுகளின் கதி?
அய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் எல்லையில் மியான்மர் நாட்டின் மிக முக்கியமான பலேத்வா நகரை கிளர்ச்சி குழுவான அரக்கான் ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. இந்தியா- மியான்மர் இடையேயான இணைப்பு நகரமான பலேத்வாவை கிளர்ச்சி குழு கைப்பற்றியிருப்பதால் அப்பகுதியிலான இந்தியாவின் பல கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு என்னவாகும் என கேள்வி எழுந்துள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக 3 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்தியாவை ஒட்டிய மியான்மர் பகுதிகளில் அரக்கான் ராணுவம் என்ற கிளர்ச்சி குழுவின் கை ஓங்கி இருக்கிறது. இதனால் மியான்மர் ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் தப்பி ஓடி தஞ்சமடைந்தனர். அவர்கள் பாதுகாப்பாக மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் மியான்மர்- இந்தியா இடையேயான சாலையில் உள்ள முக்கிய நகரமான பலேத்வா இப்போது அரக்கான் ராணுவம் என்கிற கிளர்ச்சி குழு வசமாகியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு மிசோரம் எல்லையில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. பலேத்வா நகரை மையமாக வைத்து இந்தியா பெருமளவு முதலீடும் செய்துள்ளது.
கடந்த ஆண்டு மியான்மரின் சிட்வே துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தியது. மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்தையும், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தையும் இணைக்கும் கலடன் ஆற்றின் மீது பல அடுக்கு போக்குவரத்து வசதியை உருவாக்க இந்தியா- மியான்மர் இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் சிட்வே துறைமுகம் உருவாக்கப்பட்டது. இந்த துறைமுகமானது தற்போது கிளர்ச்சியாளர்கள் வசமாகி இருக்கும் பலேத்வாவை உள்நாட்டு நீர்வழி வழியாகவும், இத் திட்டத்தின் ஒரு பகுதியாக பலேத்வாவிலிருந்து மிசோரமில் உள்ள சோரின்புய் வரை சாலை வழியாகவும் இணைக்கக் கூடியது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பலேத்வா நகரம் தற்போது கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கி இருப்பது இந்தியாவின் திட்டங்களுக்கும் முதலீடுகளுக்கும் பேராபத்தாகவும் நெருக்கடியைத் தரக் கூடியதாகவும் உருமாறும் என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications