குஜராத்திகள் வெறிச் செயல்! வடகிழக்கு உணவை விற்பனை செய்த நாகாலாந்து இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வடகிழக்கு மாநில உணவு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகாலாந்து மாநிலத்தின் இரு இளைஞர்கள் மீது குஜராத்திகள் கொடூர தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் நீண்டகாலம் இந்திய மைய நீரோட்டத்தில் இணையாமல் தனித்துவம் மிக்கவர்களாகவே இருந்து வருகின்றனர். இந்தியர்களை நமது நாட்டவர்கள் என்ற மனோநிலையுடன் வடகிழக்கு மாநிலத்தவர் அணுகாமல் இந்தியர்கள் என்றே அணுகி வருகின்றனர். இந்த சிந்தனைப் போக்கு சமீப காலங்களில் பெருமளவில் மாறிக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாநிலங்களில் சென்று பணிபுரிவது; அங்கேயே குடியிருப்பது என்பவைதான். அதாவது இந்திய நீரோட்டத்தில் வடகிழக்கு மாநில மக்களும் தங்களை ஒப்படைத்து இணைந்து கொண்டுள்ளனர்.

ஆனால் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் வடகிழக்கு மாநில மக்கள் மீது மகாராஷ்டிரா, குஜராத், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தாக்குதல் நடத்தப்படுவது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 10 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் எந்த வித அச்சுறுத்தல் இல்லாமலும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதற்கு தமிழ்நாட்டு அரசியல் சித்தாந்தமும் அடிப்படையானதாக இருக்கிறது.
இந்நிலையில்தான், குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சாணக்கியாபுரியில் வடகிழக்கு மாநில உணவு வகைகளை விற்பனை செய்த உணவகத்தை இந்து மத காவலர்கள் எனும் பெயரில் குண்டர்கள் தாக்கி உள்ளனர். One Stop North-East என்ற அந்த உணவகத்தில் நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநில உணவு வகைகள் கிடைக்கும். இதனால் அப்பகுதியில் இந்த உணவகம் பெயர் பெற்றதாக இருந்தது.
ஆனால் இந்துக்கள் அதிகம் வாழும் மாநிலம் குஜராத்: இங்கு வடகிழக்கு மாநில அசைவ வகை உணவுகளை விற்பனை செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கும்பல் ஒன்று அந்த உணவகம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த கேஹிர், ஜமீர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டது. இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவமானது நாகாலாந்து மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications