சார்.. என் ஹார்ட்டை திருடிட்டாங்க.. வாங்கி தாங்க.. போலீசை அதிர வைத்த புகார்
திருடிய இதயத்தை கண்டுபிடித்து தரும்படி இளைஞர் போலீசில் புகார்
நாக்பூர்: "திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு காதலா" என்பது போய் இப்போது போலீசில் புகாரே கொடுக்கும் நிலை வந்துவிட்டது.
மனசு கொள்ளை கொண்டு விட்டாள், இதயத்தை திருடி விட்டாள் என்று சும்மா ஒரு பேருக்குதான் சொல்லி கொண்டிருந்தோம்.ஆனால் நாக்பூரை சேர்ந்த இந்த இளைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இதை நிஜமென நம்பி, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.
என்ன விஷயம் என்று போலீசார் விசாரிக்க, "என் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டாள். அதை கண்டுபிடித்து எனக்கு திருப்பி தாருங்கள்" என்று சொல்லி இருக்கிறார்.

கேஸ் போடணும்
இதைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர். இளைஞர் ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என்றுதான் முதலில் போலீசார் நினைத்தனர். ஆனால் வந்ததிலிருந்தே விடாப்பிடியாக இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்றே தொடர்ந்து சொல்லவும்தான், விஷயம் சீரியஸ் என புரிந்தது.

என்ன செய்வது?
அது மட்டும் இல்லை, உடனே இது சம்பந்தமாக கேஸ் புக் செய்யணும் என்றும் பிடிவாதம் பிடித்தார். இதனால் அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த போலீசார், உடனே உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, இப்படி ஒரு புகார் வந்திருக்கிறது, என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார்கள்.

திருப்பி அனுப்பினர்
இதை கேட்டு உயரதிகாரிகளும் ஷாக் ஆனார்கள். பிறகு, "இந்த புகாரை பதிவு செய்வதற்கு சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை, அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வும் இல்லை... அவரை திருப்பி அனுப்பி விடுங்கள்" என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதன்படியே அந்தஇளைஞருக்கு போலீசார் புத்தி சொல்லி ஒருவழியாக வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

நொந்து கொண்ட போலீஸ்
இதை பற்றி போலீசார் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, புகார் சொன்னால், திருடிய பொருட்களை திருப்பி தருகிறோம், ஆனால் புகார் சொன்னாலும் திருப்பி தரவே முடியாத இப்படி ஒரு புகார் வந்தால் என்னா செய்வது? என்று நொந்து கொண்டார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications