சாரதா நிதி நிறுவன மோசடி.. நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
நளினி சிதம்பரம் ரூ.1.4 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாவது: சாரதா குரூப் தலைவர் சுதிப்தா சென்னுடன் சேர்ந்து, நிதி நிறுவன பணத்தை கையாடல் செய்து ஏமாற்ற, நளினி சிதம்பரம் உடந்தையாக இருந்துள்ளார். இதற்காக 2010 முதல் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் நளினி சிதம்பரம் ரூ.1.4 கோடி பணம் பெற்றுள்ளார். இவ்வாறு சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இது 6வது, துணை குற்றப்பத்திரிக்கையாகும். இந்த குற்றப்பத்திரிகையில்தான், நளினி சிதம்பரம் பெயர் இடம் பெற்றுள்ளது. அனுபூதி பிரிண்டர்ஸ் மற்றும் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டட் மற்றும் சுதிப்தா சென் ஆகியோர் சக குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
சாரதா நிதி மோசடி என்றால் என்ன?:
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது சாரதா நிதி நிறுவனம். இந்த நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்தது. இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார்.
ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications