தாஜ்மஹாலில் உள்ள மசூதியில் தொழுகைக்கு தடை... 4 பேரை கைது செய்த காவல் துறை
ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதியில் தொழுகை நடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட இந்த கல்லறைக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
இந்த தாஜ்மஹால் அருகே ஷாஜகானால் மசூதி ஒன்றும் கட்டப்பட்டது. அழகிய வடிவமைப்புடன் இருக்கும் அந்த மசூதியில் தொழுகை மற்றும் இதர இஸ்லாமிய மத வழிபாடுகள் ஷாஜகான் காலத்திலிருந்தே நடத்தப்பட்டு வந்தன.

4 பேர் கைது
இதனிடையே, இந்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மசூதியில் தொழுகை நடத்தியதாக கூறி 4 பேரை ஆக்ரா மாவட்ட காவல்துறை கைது செய்திருக்கிறது. சுற்றுலாவுக்காக தாஜ்மஹால் வந்தவர்கள் தொழுகை நடத்துவதை கண்ட மத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படையினர் அவர்களை பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்
4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்து இருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாக ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் கூறியுள்ளார்.

தொழுகைக்கு தடையா?
இதனிடையே தாஹ்மஹாலில் உள்ள மசூதியில் தொழுகைக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழத் தொடங்கி இருக்கிறது. தாஜ்மஹாலில் முன்பெல்லாம் எல்லா நாட்களும் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால், தற்போது வெள்ளிக்கிழமை மட்டுமே தொழுகை நடத்த இந்திய தொல்லியல்துறை அனுமதிப்பதாகவும் தாஜ்மஹால் இண்டெஜமியா குழு தலைவர் இப்ராஹிம் ஜெய்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

வெள்ளிக்கிழமை மட்டும் அனுமதி
இதற்கு பதிலளித்துள்ள இந்திய தொல்லியல் துறையின் ஆக்ரா வட்டத்தின் தொல்லியல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பட்டேல், உச்சநீதிமன்றம் தாஜ்மகால் வளாகத்திற்குள் தொழுகை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது என தெரிவித்துள்ளார். தாஜ்கஞ்ச் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமே இங்கு தொழுகைக்காக அனுமதிக்கப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் 2 மணி வரை தொழுகை நடத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications