தாஜ்மஹாலில் உள்ள மசூதியில் தொழுகைக்கு தடை... 4 பேரை கைது செய்த காவல் துறை
ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதியில் தொழுகை நடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட இந்த கல்லறைக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
இந்த தாஜ்மஹால் அருகே ஷாஜகானால் மசூதி ஒன்றும் கட்டப்பட்டது. அழகிய வடிவமைப்புடன் இருக்கும் அந்த மசூதியில் தொழுகை மற்றும் இதர இஸ்லாமிய மத வழிபாடுகள் ஷாஜகான் காலத்திலிருந்தே நடத்தப்பட்டு வந்தன.

4 பேர் கைது
இதனிடையே, இந்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மசூதியில் தொழுகை நடத்தியதாக கூறி 4 பேரை ஆக்ரா மாவட்ட காவல்துறை கைது செய்திருக்கிறது. சுற்றுலாவுக்காக தாஜ்மஹால் வந்தவர்கள் தொழுகை நடத்துவதை கண்ட மத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படையினர் அவர்களை பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்
4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்து இருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாக ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் கூறியுள்ளார்.

தொழுகைக்கு தடையா?
இதனிடையே தாஹ்மஹாலில் உள்ள மசூதியில் தொழுகைக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழத் தொடங்கி இருக்கிறது. தாஜ்மஹாலில் முன்பெல்லாம் எல்லா நாட்களும் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால், தற்போது வெள்ளிக்கிழமை மட்டுமே தொழுகை நடத்த இந்திய தொல்லியல்துறை அனுமதிப்பதாகவும் தாஜ்மஹால் இண்டெஜமியா குழு தலைவர் இப்ராஹிம் ஜெய்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

வெள்ளிக்கிழமை மட்டும் அனுமதி
இதற்கு பதிலளித்துள்ள இந்திய தொல்லியல் துறையின் ஆக்ரா வட்டத்தின் தொல்லியல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பட்டேல், உச்சநீதிமன்றம் தாஜ்மகால் வளாகத்திற்குள் தொழுகை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது என தெரிவித்துள்ளார். தாஜ்கஞ்ச் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமே இங்கு தொழுகைக்காக அனுமதிக்கப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் 2 மணி வரை தொழுகை நடத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications