பேக்கரிக்கு ரூ.15 லட்சம் பாக்கி... சந்திரபாபு நாயுடு மகன் மீது புதிய புகார்
அமராவதி: ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் பேக்கரிக்கு ரூ.15 லட்சம் பாக்கி வைத்துவிட்டு சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திராவில் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த லோகேஷ், துறை சார்ந்த கூட்டங்களுக்காக விசாகப்பட்டிணத்தில் உள்ள பிரபல பேக்கரியிலிருந்து ஸ்நாக்ஸ் வாங்கியதாக தெரிகிறது.
இதனிடையே தனது துறை சார்ந்த கூட்டங்களுக்காக வாங்கப்பட்ட ஸ்நாக்ஸ் பொருட்களுக்காக ரூ. 15 லட்சம் வரை அவர் பாக்கி வைத்துள்ளதாக இப்போது கூறப்படுகிறது.

ஐ.டி. அமைச்சர்
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது அம்மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் நர லோகேஷ். இவர் துறை சார்ந்த கூட்டங்களின் போது அதிகாரிகளுக்கு அளிக்கவும், தன்னை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பதற்காகவும் விசாகப்பட்டிணத்தில் உள்ள பிரபல பேக்கரி கடை ஒன்றில் ஸ்நாக்ஸ் வாங்கியுள்ளார்.

ரூ.15 பாக்கி
5 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் வாங்கப்பட்ட ஸ்நாக்ஸ் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என்றும், அதற்கான தொகையை முந்தைய தெலுங்கு தேசம் அரசு கொடுக்காமலேயே இழுத்தடித்து வந்திருப்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அரசுத் துறைகளுக்கான செலவுத்தொகை குறித்து கணக்கெடுத்த போது இந்த விவகாரமும் ஜெகன் கையில் சிக்கியுள்ளது.

நிலுவைத் திட்டங்கள்
மேலும், ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது எந்தெந்த துறைகளில் என்னென்ன திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது பற்றியும் இப்போது கண்டறியப்பட்டு வருகிறது. இதனிடையே பேக்கரி விவகாரத்தை வைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் நர லோகேஷை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

கோபம்
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் மீதான பழிவாங்கும் செயல் என்றும், அவமானப்படுத்தும் நோக்கில் ஜெகன் செயல்படுகிறார் எனவும் தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications