பேக்கரிக்கு ரூ.15 லட்சம் பாக்கி... சந்திரபாபு நாயுடு மகன் மீது புதிய புகார்
அமராவதி: ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் பேக்கரிக்கு ரூ.15 லட்சம் பாக்கி வைத்துவிட்டு சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திராவில் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த லோகேஷ், துறை சார்ந்த கூட்டங்களுக்காக விசாகப்பட்டிணத்தில் உள்ள பிரபல பேக்கரியிலிருந்து ஸ்நாக்ஸ் வாங்கியதாக தெரிகிறது.
இதனிடையே தனது துறை சார்ந்த கூட்டங்களுக்காக வாங்கப்பட்ட ஸ்நாக்ஸ் பொருட்களுக்காக ரூ. 15 லட்சம் வரை அவர் பாக்கி வைத்துள்ளதாக இப்போது கூறப்படுகிறது.

ஐ.டி. அமைச்சர்
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது அம்மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் நர லோகேஷ். இவர் துறை சார்ந்த கூட்டங்களின் போது அதிகாரிகளுக்கு அளிக்கவும், தன்னை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பதற்காகவும் விசாகப்பட்டிணத்தில் உள்ள பிரபல பேக்கரி கடை ஒன்றில் ஸ்நாக்ஸ் வாங்கியுள்ளார்.

ரூ.15 பாக்கி
5 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் வாங்கப்பட்ட ஸ்நாக்ஸ் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என்றும், அதற்கான தொகையை முந்தைய தெலுங்கு தேசம் அரசு கொடுக்காமலேயே இழுத்தடித்து வந்திருப்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அரசுத் துறைகளுக்கான செலவுத்தொகை குறித்து கணக்கெடுத்த போது இந்த விவகாரமும் ஜெகன் கையில் சிக்கியுள்ளது.

நிலுவைத் திட்டங்கள்
மேலும், ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது எந்தெந்த துறைகளில் என்னென்ன திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது பற்றியும் இப்போது கண்டறியப்பட்டு வருகிறது. இதனிடையே பேக்கரி விவகாரத்தை வைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் நர லோகேஷை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

கோபம்
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் மீதான பழிவாங்கும் செயல் என்றும், அவமானப்படுத்தும் நோக்கில் ஜெகன் செயல்படுகிறார் எனவும் தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications