6 செல்போன்… 32 சிம்கார்ட்... 70 நாட்கள் போக்கு காட்டிய நாராயண சாய்! அமுக்கிய போலீஸ்!!
சண்டிகர்: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசராம்பாபுவின் மகன் நாராயணசாய் செவ்வாய்கிழமை இரவு சண்டிகர் அருகே கைது செய்யப்பட்டார்.
எலியை பூனை துரத்துவதைப் போல டெல்லி - சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் 72 மணிநேரம் விரட்டிய போலீசார் நாராயண சாயை கைது செய்துள்ளனர். அப்போது அவர் போர்டு எகோ ஸ்போர்ட் காரில் சிங் போல வேடமிட்டு சென்று கொண்டிருந்தனர்.
அவருக்கு சமையல் செய்ய ஒரு சிறுவனும் உடன் இருந்தான். கடந்த 2 மாதகாலமாக போகும் வழியெங்கும் கார்களை மாற்றி உபயோகித்து வழியிலேயே சமைத்து சாப்பிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளான்.

பாலியல் புகார்
கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள், ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் செய்தனர்.

பாலியல் பலாத்காரம்
இதில், 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூத்த சகோதரி புகாரில் தெரிவித்திருந்தார்.
2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சூரத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது தன்னை நாராயண் சாய் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைய சகோதரி புகாரில் கூறியிருந்தார்.

தலைமறைவான நாரயண சாய்
இந்த புகாரின்பேரில் ஏற்கனவே சிறையில் இருந்த ஆசாராம் பாபுவை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். ஆனால், அவரது மகன் நாராயண் சாய் தலைமறைவானார்.

தனிப்படை
தலைமறைவு வாழ்க்கையின் போது 6 செல்போன்களையும், 32 சிம்கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளான் சாய். அவனைப் பற்றிய துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தனர் போலீசார்.
22 போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று லூதியானா பகுதியில் முகாமிட்டனர். சாய் அங்குதான் இருப்பதாக உறுதியான தகவல் தெரிந்த உடன் டிசம்பர் 2ம் தேதியே 10 போலீசார் நெடுஞ்சாலைப் பகுதியை இஞ்ச் இஞ்ச் ஆக அலசத் தொடங்கினர்.

சிக்கிய எலி
சிங் வேடமிட்டு உலா வந்த நாராயணசாயை கடைசியில் நள்ளிரவு நேரத்தில் டெல்லி குற்றப் பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது உதவியாளரும், டிரைவருமான ஹனுமனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 70 நாட்கள் போலீசாருக்கு போக்கு காட்டி வாழ்ந்து வந்த நாராயண சாயின் தலைமறைவு வாழ்க்கை செவ்வாய் நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது.

பல கார்கள்
முழுவதும் பயணத்திலேயே இருந்த சாய், பல கார்களை மாற்றியுள்ளான். டொயாட்டோ, ஸ்விப்ட், போர்ட் எக்கோ ஸ்போர்ட் என வழியெங்கும் பல கார்களில் வலம் வந்ததாக போலீஸ் விசாரணையில் கூறியுள்ளான். கைதுக்குப் பின்னர் சூரத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications