ஃபேஸ்புக்கில் சச்சினை தோற்கடித்த மோடி
டெல்லி: ஃபேஸ்புக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் அதிகம் பேசப்பட்ட பிரபலமாக உள்ளார். அவரை அடுத்து சச்சின் டெண்டுல்கரைப் பற்றி பேசப்பட்டுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துவிடுகின்றனர். அதன்படி ஃபேஸ்புக்கில் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை பற்றி தான் மக்கள் அதிகம் பேசியுள்ளனர். மோடியை அடுத்து கிரிக்கெட்டில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரை பற்றி மக்கள் பேசியுள்ளனர்.

சச்சினை அடுத்து ஐபோன் 5எஸ், மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் பற்றி மக்கள் ஃபேஸ்புக்கில் அதிக அளவில் பேசியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் முர்தாலில் உள்ள சுக்தேவ் தாபாவுக்கு நிச்சயம் செல்ல வேண்டும் என்று மக்கள் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில், கன்னாட் பிளேஸில் உள்ள பங்களா சாஹிப் குருத்வார் மற்றும் டெல்லியில் உள்ள இந்தியா கேட் ஆகிய இடங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications