4 வருடங்களை நிறைவு செய்யும் மோடி அரசு சாதித்தது என்ன?
டெல்லி: மே 26ம் தேதியுடன் நரேந்திர மோடி அரசு 4 வருடங்களை பூர்த்தி செய்கிறது.
ஊழலற்ற நிர்வாகம், வருடத்திற்கு 10 மில்லியன் வேலை வாய்ப்பு என்றெல்லாம், வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி சர்க்கார், 4 வருடங்களை நாளை பூர்த்தி செய்கிறது.
பாஜகவினரால் சாதனை நாயகன் என பிம்பிக்கப்படும் மோடியின் அரசு, 4 ஆண்டுகளில் அப்படி என்னதான் சாதனை செய்தது? அதையும் தான் பார்த்துவிடலாமே.

ஜிஎஸ்டி வரி விதிப்பு
10 வருடங்களாக ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கடந்த வருடம் 2017ல் ஜிஎஸ்டி வரி விதிப்பை மோடி அரசு அமல்படுத்தியது. முதல் சில மாதங்கள் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல்வேறு நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தன. ஆனால், அது திருத்தப்பட்டு சரி செய்யப்பட்டுக்கொண்டே இருப்பதால், ஜிஎஸ்டி வரி நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. மறைமுக வரிகளில் பெரும் சீர்திருத்தம் இதனால் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு கொள்கை
பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 53 நாடுகளுக்கு சென்றுள்ளார். வெளிநாட்டு உறவில் இந்தியா மேம்பட்டுள்ளது. சீனா போன்ற வல்லரசு நாடுகளை டோக்லாமில் நேருக்கு நேர் இந்தியா எதிர்கொண்டதோடு, சீனாவின் முயற்சிகளை முறியடித்தது. அதேநேரம், பாகிஸ்தானுடனான உறவில் மேம்பாடு இல்லை. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என பாக். எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியபோதிலும், பிறகும், பாகிஸ்தானின் அத்துமீறல்கள் நின்றபாடில்லை. ஆயினும் தக்க பதிலடியை இந்தியாவும் கொடுத்து வருகிறது.

பொருளாதார குற்றவாளிகள் சட்டம்
விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றதால் கடும் விமர்சனங்களை சந்தித்த மோடி அரசு, அதற்கு பரிகாரமாக கொண்டு வந்ததுதான் The Economic Offenders Bill சட்டம். ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பிச் செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, இந்த சட்டம் வகை செய்கிறது.

பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை
மோடி அரசு வந்த பிறகு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வெளியானதை போல ஊழல் குற்றச்சாட்டுகள் வரவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி காலகட்டத்தில், எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து பல ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டன. ஆனால், மோடி அரசுக்கு எதிராக அதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன் வைக்கவில்லை.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications