சுதந்திர தினம்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து- எல்லையில் பாக். தாக்குதல்!
டெல்லி: 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் 68வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
எல்லையில் தாக்குதல்
இதனிடையே ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் மீண்டும் இந்திய நிலைகள் மீது நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் மணீஷ் மேத்தா, பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலுக்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது என்றார். முன்னதாக நேற்று பகலில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.