டெல்லியில் உலக சுஃபி மாநாட்டை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி
டெல்லி: டெல்லியில் நடக்க உள்ள உலக சுஃபி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைக்கிறார்.
டெல்லியில் உலக சுஃபி மாநாடு இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், சர்வதேச தலைவர்கள், மத தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், சுஃபி மாஸ்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து இந்திய உலமா மற்றும் மஷைக் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. சுஃபி போதனைகளால் உலக அளவில் தீவிரவாதத்தை எப்படி தடுக்க முடியும் என்பது குறித்து மாநாட்டில் விவாதிக்க உள்ளனர்.
மேலும் இஸ்லாத்தில் பெண்களின் பங்கு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.