ஏப்ரல் 24க்குப் பிறகு 'மோடி அலை' சுனாமியாக மாறும்... அமித் ஷா ஆருடம்
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா கூறியதாவது :-

கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து துறைகளிலும் செயலிழந்துவிட்டது.
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. வாரணாசி தொகுதியில் மோடி வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின்னர் நாடெங்கும் வீசி வரும் மோடி அலை சுனாமியாக மாறும்' எனத் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து நேற்று அவர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications