மும்பையை "வட்டமடித்த" சூறாவளி... மேலே இருந்து "ஸ்டில்" எடுத்த நாசா வீரர்!
மும்பை: மும்பைக்கு மேலே சூறாவளிப் புயல் மையம் கொண்டுள்ளதை நாசா விண்வெளி வீரர் வானில் இருந்தபடியே புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.
கோடையால் தகித்துக் கிடந்த மும்பையில் நேற்று முன்தினம் மழை பொழிந்தது. இதனால், மும்பை குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் மாறியது. மேலும் தென் மேற்குப் பருவ மழையும் அங்கு தற்போது தொடங்கியுள்ளது.
மும்பை மக்கள் மழையை ரசித்து மகிழ்ந்த நிலையில் இந்த மழைக்குக் காரணமான புயலை முன்கூட்டியே வானில் இருந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார் நாசா விண்வெளி வீரர் டெர்ரி டபிள்யூ விர்ட்ஸ். மும்பைக்கு மேலே வானில் மேகங்கள் சூழ்ந்து, புயல் உருவாகியுள்ளதை இந்தப் புகைப்படங்களில் அழகாகப் பதிவாகியுள்ளது.
Tropical Cyclone 01A near #Mumbai #India. pic.twitter.com/6qv4ViKiuH
— Terry W. Virts (@AstroTerry) June 7, 2015 இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோவைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் டெர்ரி.
தற்போது அரபிக் கடலில் அசோபா என்ற பெயரில் புயல் உருவாகியுள்ளது. அது மும்பையிலிருந்து 590 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications