கொள்ளையன் நாதுராம் பரபரப்பு வாக்குமூலம் .. ராஜஸ்தான் போலீசிடம் பேசியது என்ன?
கொள்ளையன் நாதுராம் ராஜஸ்தான் போலீசிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறான்.
Recommended Video

ஜெய்ப்பூர்: கொள்ளையன் நாதுராம் ராஜஸ்தான் போலீசிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். பல நாட்களாக போக்கு காட்டிக் கொண்டு இருந்த இவனை 4 நாட்களுக்கு முன் ராஜஸ்தான் போலீஸ் கைது செய்தது.
தற்போது இவனை ராஜஸ்தான் போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. மேலும் இவன் விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட இருக்கிறான்.
ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் இவன் பல முக்கிய உண்மைகளை கூறியதாக தெரியவந்து இருக்கிறது. இவனிடம் இன்னும் சில வாக்குமூலங்கள் வாங்கப்பட உள்ளது.

கொள்ளை
சென்னையில் இருக்கும் கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகள் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் குற்றச்சாட்டப்பட்டான். மேலும் நாதுராம் கூட்டாளி தினேஷ் சவுத்ரியும் உடந்தையாக செயல்பட்டான். இவர்களை போலீஸ் தேடிவந்தது.

பெரியபாண்டியன் மரணம்
மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தன்னுடைய குழுவை அழைத்துக் கொண்டு இவனை தேடி ராஜஸ்தான் சென்றனர். அப்போது அவனின் உறவினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். ராஜஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெரியபாண்டியன் கொல்லப்பட்டார். நாதுராம் தப்பி ஓடினான்.

உண்மை
இந்த கொலையை முதலில் நாதுராம் செய்ததாக கூறப்பட்டது. பின் இந்த கொலையை செய்தது தமிழக போலீஸ்தான் என்ற உண்மையை ராஜஸ்தான் போலீஸ் வெளியே கொண்டு வந்தது. போலீஸ் துப்பாக்கியில் இருந்து குண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டுவிட்டதாக வாக்குமூலம் அளித்து இருந்தார்.

தேடுதல்
இந்த நிலையில் நாதுராமை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். பேஸ்புக்கில் அவன் தீவிரமாக இயங்கியும் கூட கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்பு குஜராத்தில் ராஜஸ்தான் போலீஸ் அவனை கைது செய்து ராஜஸ்தான் கொண்டு வந்தது.

போலீசிடம் வாக்குமூலம்
தற்போது நாதுராம் ராஜஸ்தான் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் ''காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளான். இதனால் பெரியபாண்டியனை முனிசேகர் சுட்டது உறுதியாகி உள்ளது. பல நாள் குழப்பத்திற்கு இந்த வாக்குமூலம் முடிவு காட்டியுள்ளது.

விசாரணை
மேலும் ''துப்பாக்கி நடத்த துவங்கியவுடன் நாங்கள் கிளம்பிவிட்டோம். துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் நண்பனுடன் ஓடி விட்டேன். நாங்கள் திரும்பி சுடவேயில்லை'' என்றும் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். இவனிடம் இன்னும் சில தகவல்களை சேகரிக்க ராஜஸ்தான் போலீஸ் முடிவெடுத்து இருக்கிறது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications