காந்தியைப் போல அவரைக் கொன்ற 'கொலையாளி' கோட்சேவும் சிறந்த தேசபக்தர்.. இது பாஜக எம்.பி. மகாராஜ் பேச்சு
டெல்லி: மகாத்மா காந்தியைப் போல அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவும் சிறந்த தேசபக்தரே என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சாக்சி மகாராஜ் கருத்து தெரிவித்து புதிய பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்த நாள் முதலே அக்கட்சி எம்.பிக்களும் மத்திய அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பாஜக எம்.பி. சாக்சி மகாராஜ் இணைந்துள்ளார்.

அவர் பேட்டி ஒன்றில், மகாத்மா காந்தியைப் போல கோட்சேவும் சிறந்த தேசபக்தர். கோட்சே தேசியவாதி. காந்தி இந்த நாட்டுக்கு நிறைய செய்துள்ளார் என்று சாக்சி மகாராஜ் கூறியிருக்கிறார்.
நாட்டின் தந்தை என்று போறப்படுகிற மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு எப்படி பாஜக எம்.பி. புகழாரம் சூட்டலாம் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜ்யசபாவில்..
இதனிடையே பாரதிய ஜனதா கட்சி ஆளும் மகாராஷ்டிராவில் அரசு விழாவில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு புகழாரம் சூட்டி பேசியதற்கு ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த பிரச்சனையால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ராஜ்யசபாவில் இன்று பூஜ்ஜிய நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ஹுசைன் தல்வாய் பேசியதாவது:
மகாராஷ்டிராவில் அரசு சார்பில் விழாவில் சிலர் மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை புகழ்ந்து பேசியுள்ளனர். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாகக் கூறி, மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வேலைகளில் அரசு ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.
இந்த நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது. இது குறித்து மகாராஷ்டிரா முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு ஹூசைன் பேசினார். இதனால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பிக்கள் தங்களது கையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி சபை தலைவர் முன் நின்று முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி எழுந்து, இதை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மகாத்மா காந்தியை படுகொலை செய்தோர் யாராக இருந்தாலும் அவர்கள் அரசுக்கு எதிரானவர்களே. காந்தியை படுகொலை செய்த நபரை புகழ்பாடும் நடவடிக்கைகளை அரசு ஆதரிக்காது என்றார். இந்த பிரச்சனையால் ராஜ்யசபாவின் நடவடிக்கைகள் 2 முறை முடங்கியன.
-
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications