காஷ்மீரில் அதிரடி தாக்குதலை ஆரம்பித்தது பாதுகாப்பு படை.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இந்த வார தொடக்கத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இங்கு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. விரைவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதற்காக ஐபிஎஸ் அதிகாரிகளையும், ராணுவ வீரர்களையும், ஆளுநருக்கு அறிவுரை வழங்க நியமித்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரவில் இருந்து சிறப்பு கமாண்டோ படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களிலும், போர் காலங்களிலும் சிறப்பு தாக்குதல் நடத்த இந்த படை வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
ஸ்னைப்பர் துப்பாக்கி, ரேடார் கருவிகளுடன் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லை பகுதியில் கூடுதல் வீரர்களை நிறுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்றும் நிறைய வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன் மலை பகுதிகளில் ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் 1 பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இன்னும் தாக்குதல் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications