தங்களைப் பலப்படுத்திக் கொள்ள சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நக்சலைட்கள்...!
ராய்ச்சூர்: சட்டிஸ்கர் மாநிலத்தில் 13 சிஆர்பிஎப் வீரர்களை நக்சலைட்கள் தாக்கிக் கொன்ற விவகாரம் குறித்து முன் கூட்டியே மாநில அரசு உஷார்படுத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்று 23 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதைத் தடுக்கத் தவறி விட்டனர்.
நவம்பர் 7ம் தேதி மத்திய உளவுப் பிரிவு, மாநில உளவுப் பிரிவுக்கு, இதுபோன்ற ஒரு தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருந்தது. சட்டிஸ்கர் மாநிலத்தில் பெரிய தாக்குதல் ஒன்றுக்கு நக்சலைட்கள் திட்டமிட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

பஸ்தர் பகுதியில் நக்சலைட்கள் கிட்டத்தட்ட பலவீனமடைந்துள்ளனர். தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் மீண்டும் ஒன்று சேர அவர்கள் முயற்சிப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்களிடையே ஒரு வகையான விரக்தியும், சோர்வும் அதிகரித்திருப்பதாகவும், அதிலிருந்து விடுபட பெரிய தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு வந்தனர். பெரிய தாக்குதல் நடந்தால்தான் நக்சலைட்கள் மத்தியில் மீண்டும் உத்வேகம் அதிகரிக்கும் என்பது அவர்களது திட்டமாகும்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சட்டிஸ்கர் படையினர் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நக்சலைட்களைக் கைது செய்திருந்தனர். இதனால் நக்சலைட்கள் மிகவும் சோர்வடைந்து போயிருந்தனர். இது அவர்களுக்குப் பெரும் பாதிப்பாக அமைந்திருந்தது. இதனால்தான் பெரிய தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு வந்தனர். அதன்படியே நேற்று நடத்திக் காட்டி விட்டனர்.
நக்சலைட்களின் தாக்குதலை முறியடிக்க உளவுப் பிரிவினரும், பாதுகாப்புப் படையினரும் உஷாராகவே இருந்தனர். ஆனால் இந்த முறை நக்சலைட்கள் அனைவரையும் ஏமாற்றி விட்டனர். கடந்த 3 மாதமாகவே இந்தத் தாக்குதலை திட்டமிட்டு வந்தனர் நக்சலைட்கள்.
இந்தத் தாக்குதல் மூலம் நக்சலைட்கள் மத்தியில் ஒரு விதமான உற்சாகம், உத்வேகம், தீவிரம் பிறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற மேலும் பல தாக்குதல்களுக்கும் அவர்கள் திட்டமிடலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications