இந்தி சேனல் ஒளிபரப்புக்கு தடை- மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் என்டிடிவி வழக்கு
இந்தி சேனல் ஒளிபரப்பு தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது என்டிடிவி நிர்வாகம்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தி சேனல் ஒளிபரப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் என்டிடிவி வழக்கு தொடர்ந்துள்ளது.,
பதான்கோட் தீவிரவாத தாக்குதல் செய்தியை ஒளிபரப்பிய என்டிடிவி இந்தி சேனல், அந்த விமானப் படை தளத்தில் உள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்த தகவலை வெளியிட்டது.
இது தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் இருந்தது எனக் கூறி நவம்பர் 9-ந் தேதியன்று என்டிடிவி இந்தி சேனல் ஒளிபரப்புக்கு தடை விதித்தது.

நாடு முழுவதும் இந்த தடை உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த தடைக்கு எதிராக என்டிடிவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சேனல் ஒளிபரப்பு தடையை அமல்படுத்த 2 நாட்களே உள்ள நிலையில் என்டிடிவி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications