வரலாறு காணாத வெள்ளம்... கேரளத்தில் ரூ. 8,000 கோடி சேதம்
கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதல் முகாம்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வீடு, வாசல்களை இழந்தவர்களின் கைகளில் ஒரு காசு கூட இல்லாததால் மிகவும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் இதுவரை 37 பேர் பலியாகிவிட்டனர். 1500 வீடுகள் சேதமடைந்துள்ளன.
வெள்ள பாதிப்புக்கு உடனடியாக ரூ.400 கோடி வழங்க வேண்டும் என்றும் கேரளத்தில் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications