வரலாறு காணாத வெள்ளம்... கேரளத்தில் ரூ. 8,000 கோடி சேதம்

கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரிய கேரளா வெள்ளம்- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

    கேரளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    Nearly Rs. 8,000 crores damage in Kerala

    மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதல் முகாம்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    வீடு, வாசல்களை இழந்தவர்களின் கைகளில் ஒரு காசு கூட இல்லாததால் மிகவும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் இதுவரை 37 பேர் பலியாகிவிட்டனர். 1500 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    வெள்ள பாதிப்புக்கு உடனடியாக ரூ.400 கோடி வழங்க வேண்டும் என்றும் கேரளத்தில் ரூ.8000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+