நீட்: 2 நிமிட தாமதத்தால் உள்ளே அனுமதிக்கவில்லை.. பெங்களூரில் சுவர் ஏறி குதித்த மாணவிகள்!
நீட் தேர்வு எழுத காலதாமதமாக வந்த காரணத்தால் பெங்களூரில் மூன்று பேரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத காலதாமதமாக வந்த காரணத்தால் பெங்களூரில் மூன்று பேரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் கல்லூரியின் சுவர் ஏறி உள்ளே குதித்து இருக்கிறார்கள்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மோசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெளிமாநிலங்களிலும் இந்த மாதிரியான மோசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதில் முக்கியமானது, 9.30 மணிக்கு மேல் வரும் மாணவ, மாணவிகள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கறாராக உள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள எம்.ஜி சாலை அருகே உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் 9.30 மணிக்கு பின் தேர்வெழுத வந்த மாணவர்கள் உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை. இதில் ஒருவர் மாணவர், இரண்டு பேர் மாணவிகள். இவர்கள் எவ்வளவு கெஞ்சியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கர்நாடக மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது, இவர்கள் மொத்தமாக இரண்டு நிமிடம் மட்டுமே கால தாமதமாக வந்துள்ளனர். ஆனாலும் யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்களின் பெற்றோர்கள் சண்டை போட்டும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் மூன்று பேரும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். மாணவர்களின் பெற்றோர்களே அவர்களை உள்ளே எகிறி குதிக்க சொல்லி உதவினார்கள். இது வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஆனால் உள்ளே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா என்ற விவரம் வெளியாகவில்லை.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications