செம்மரக் கடத்தல் வழக்கு... நடிகை நீத்து அகர்வாலின் ஜாமீன் மனு தள்ளுபடி
திருப்பதி: செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை நீத்து அகர்வாலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் கடந்த மாதம் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தியதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனனர். அதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்தியதாக கைதான கூலி தொழிலாளர்களிடம் ஆந்திரா போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்கினர்.

அதில், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், படத் தயாரிப்பாளருமான மஸ்தான்வலி என்பவரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் தனது படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நீத்துஅகர்வாலும் தனிக்குடித்தனம் நடத்தியதும், அவர் மூலம் கடத்தல்காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது.
மஸ்தான்வலி கைதைத் தொடர்ந்து நீத்து அகர்வால் தலைமறைவானார். பின்னர் அவரை ஹைதராபாத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், நீத்து நந்தியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை போலீசார் 2 நாள் காவில் எடுத்து விசாரணை நடத்.தினர். அதில் மஸ்தான்வலியுடன் உள்ள தொடர்பு கடத்தல்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்த விவரம் போன்றவைகள் பற்றி விசாரித்தனர். போலீஸ் காவல் முடிந்ததையடுத்து நீத்துஅகர்வால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி நீத்துஅகர்வால் ஆலகட்டா ஜுடீசியல் முதல்வகுப்பு கோர்ட்டில் மனு செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீத்து அகர்வால் சார்பில் அவரது வக்கீல் சிவபிரசாத்ராவ் ஆஜராகி வாதாடினார்.
போலீஸ் விசாரணை முடிந்து விட்டதால் நீத்து அகர்வாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் இதற்கு அரசுதரப்பு வக்கீல் பாலுநாயக் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடும் போது, ‘‘நீத்து அகர்வாலிடம் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை இன்னும் கைது செய்ய வேண்டியது உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு பங்கம் ஏற்படும்'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோமசேகர் நடிகை நீத்துஅகர்வால் ஜாமீன் மனு நிராகரித்து உத்தரவிட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications