பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.. "மோடிக்கு என்ன தயக்கம்?".. பரூக் அப்துல்லா ஆவேசம்
ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
"சீனாவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்.. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் தயங்குகிறார்" என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
காஷ்மீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியிருந்த நிலையில், பரூக் அப்துல்லாவும் அதை வழிமொழியும் வகையில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அல் அரேபியா தொலைக்காட்சி சேனலுக்கு இரு தினங்களுக்கு முன்பு பேட்டியளித்தார். அப்போது அவர், "காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா அலட்சியப்போக்குடன் செயல்படுகிறது. இந்த அலட்சியப்போக்கு தொடர்ந்தால் இரு நாடுகள் இடையே அணு ஆயுதப் போர் கூட ஏற்படலாம். எனவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அழைத்து வர வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்" என அவர் கூறியிருந்தார்.

பரூக் அப்துல்லாவும் வலியுறுத்தல்
ஷெபாஸ் ஷெரீபின் இந்த பேச்சுக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. பாகிஸ்தானில் கடும் பஞ்சமும், பட்டினியும் நிலவி வரும் சூழலில், அந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் இந்தியாவை வம்புக்கு இழுப்பது அந்நாட்டுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என அவை தெரிவித்தன. இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவும் பாகிஸ்தானின் கருத்தை வலியுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.

"மோடிக்கு என்ன தயக்கம்?"
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீரில் நுழைந்ததை அடுத்து, பரூக் அப்துல்லா அதில் கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே காஷ்மீரில் தீவிரவாதமும், வன்முறையும் ஒழியாது. இதை மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு உணர வேண்டும். சீனா எத்தனை முறை இந்திய எல்லைகளை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது? அந்த நாட்டுடன் மட்டும் 16 முறை இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டும் பிரதமர் மோடி தயங்குவது ஏன்?

"பண்டிட்டுகள் கதி என்ன ஆனது?"
தனது வாக்குவங்கியை அதிகப்படுத்துவதற்காக நாட்டில் உள்ள இந்து - முஸ்லிம்கள் இடையே பகையையும், வெறுப்பையும் பாஜக பரப்பி வருகிறது. இப்போது வெளியான 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமும் இதே நோக்கத்திற்காகவே வெளியிடப்பட்டது. காஷ்மீர் பண்டிட்டுகளை மீண்டும் காஷ்மீருக்குள் அழைத்து வந்து, மத்திய அரசு மீள்குடியேற்றம் செய்தது. ஆனால் இப்போது அவர்களின் கதி என்ன? தீவிரவாதத் தாக்குதலுக்கு பயந்து அவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். முதலில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைப்பதை நிறுத்துங்கள். பின்னரே நாட்டில் அமைதி ஏற்படும். இவ்வாறு பருக் அப்துல்லா கூறினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications