போர்க்குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜி பெயர் இல்லை... மத்திய அரசு ஆவணங்கள்
டெல்லி: மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்கள் எதிலும் போர்க்குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
1945-ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் மரணம் தொடர்பாக நீண்டகாலமாக மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேதாஜி குறித்த தகவல்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி நேதாஜியின் பிறந்ததினத்தையொட்டி கடந்த ஜனவரி 23-ந் தேதி 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 50 ஆவணங்களும், ஏப்ரல் மாதம் மேலும் 25 ஆவணங்களும் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டன.
இந்நிலையில் மத்திய கலாசாரத் துறைச் செயலாளர் என்.கே.சின்ஹா, நேதாஜி தொடர்பான 25 ரகசிய ஆவணங்களை இணையதளத்தில் நேற்று வெளியிட்டார். அதில் 5 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தவை. 4 ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தாலும், 16 ஆவணங்கள் வெளியுறவு அமைச்சகத்தாலும் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்த ஆவணங்கள் 1968 ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது இப்போது வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications